முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தாய்தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையும் இன்று இடம்பெற்றது
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்த மக்கள் நினைவாக சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டு கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைதொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்.மாவட்ட செயலக கணக்காளர், கே.றெஜினோல்ட், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை வைத்தியர் தயானந்தறூபன்,புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் க.ஜெனமேஜெயந், வணிகர்சங்க தலைவர் நவநீதன், புதுக்குடியிருப்பு காவல்துறை நிலைய பிரதி பொறுப்பதிகாரி, 682 ஆவது படைப்பிரிவு அதிகாரி,பொதுசுகாதார பரிசோதகர்,ஸ்ரீசுப்பிரமணிய வித்தியாலய அதிபர் உள்ளிட்ட தாய்த்தமிழ் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
received 685528305749721