இந்திய உர வகைகளுக்கு வழங்குவதற்காகத் தனிப்பட்ட கணக்கில் 29 கோடி ரூபா வைப்பு – ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தலையீடு’ என்ற தலைப்பில், வார நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானதும் வெறுக்கத்தக்கதுமான செய்தியாகும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தியினை முழுமையாக மறுப்பதாக, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தச் செய்தி தொடர்பாக அனைத்துத் தரப்பினரையும் அழைத்து முறையானதும் விரிவானதுமான விசாரணையொன்றை உடனடியாக நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு ஜனாதிபதியின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.