மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

WhatsApp Image 2021 10 24 at 07.04.57
WhatsApp Image 2021 10 24 at 07.04.57

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கல்லடி விபுலானந்த இசை நடன பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இன்று (24) காலையில் இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி மோட்டர் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து சாரதியை கைது செய்ததுடன் பஸ் வண்டியை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாணைகளை காத்தான்குடி போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.