இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் நினைவாக மரங்கள் நாட்டி வைப்பு

DSC 0358
DSC 0358

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10வது அதிகாரி குகஶ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள் கடந்த 09 திகதி அன்று தனது 92வது அகவையில் இறைபதமடைந்தார்.

அன்னாரது ஞாபகார்த்தமாக 92 பனைமர விதைகள் இன்று (24) நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக் கூடல் அமைப்பினால் செம்மணிவீதியும் நல்லூரன் செம்மணி வளைவும் சந்திக்கும் வீதியோரங்களில் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், நல்லூர் பிரதேச செயலகர் அ.எழிலரசி, யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் , கலைக்கூடல் அங்கத்தவர்கள், குகனேயர் குழாம் அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.