பாடசாலைகளைத் தயார்படுத்தும் பணிகள் ஆரம்பம்

166838 school holiday
166838 school holiday

அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளும் நாளைய தினம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

பல மாதங்களின் பின்னர் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளமையால், பெற்றோர்கள் தாமாக முன்வந்து பாடசாலைகளை சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா நேற்று (23) தெரிவித்தார்.

அதற்கமைய, 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகள், கடந்த 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன.