இரசாயன உரத்தை வழங்குமாறு கோரி, 41 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பொலன்னறுவை – ஹபரண நகரில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
உரம் தொடர்பான பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதேவேளை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவும், உரத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் பதுளை நகரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.