ஆளும் கட்சி தரப்பினரிடம் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை

gotta5
gotta5

ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று நேற்று (24) இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து கருத்துரைத்த அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன எதிர்கால ஒன்றிணைந்த அரசியல் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார்.

அத்துடன் உரப் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட சகலதுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் அரசாங்கத்திற்குள் ஏதாவது பிரச்சினை காணப்படுமாயின் வெளியே சென்று கருத்துரைக்காமல், அரசாங்கத்திற்குள்ளேயே பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பிரச்சினைகளை இதன்போது வெளிப்படுத்தியதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.