மட்டு வவுணதீவு வயலில் ஆர்பிஜி லோஞ்சர் மீட்பு

WhatsApp Image 2021 10 25 at 13.39.50
WhatsApp Image 2021 10 25 at 13.39.50

மட்டக்களப்பு வவுணதீவு காவற்துறை பிரிவிலுள்ள நெடுஞ்சேனை வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த  ஆர்பிஜி லோஞ்சர் ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.

WhatsApp Image 2021 10 25 at 13.39.49

குறித்த வயலை சம்பவதினமான நேற்று மாலை உழவு இயந்திரம் மூலம் வயல் உரிமையாளர் உழவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்து  ஆர்பிஜி லோஞ்சர் ஒன்று நிலத்தில் இருந்து வெளியே வந்துள்ளது 

இதனையடுத்து இது தொடர்பாக காவற்துறையினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து காவற்துறையினர் சென்று குறித்த ஆர்பிஜி லோஞ்சரை மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

இதேவேளை கடந்த காலங்களில் இந்த பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுபகுதியாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது