முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 மற்றும் 19 வயதினருக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுவருகிறது
நாட்டில் கொரோனா வைரஸினுடைய தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் பல்வேறு வயதுப் பிரிவினருக்கும் கட்டம் கட்டமாக தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றுவருகிறது
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று 18 மற்றும் 19 வயதினருக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம் பெற்றுவருகின்றன
இதில் ஒரு அங்கமாக புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
குறித்த வயதுப் பிரிவினர் ஆர்வத்துடன் தடுப்பூசி ஏற்றிவருவதனை அவதானிக்க முடிந்தது