ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்றும் ஆர்ப்பாட்டம்!

202102261906087784 Demonstration by the Grama Niladhari Association demanding SECVPF
202102261906087784 Demonstration by the Grama Niladhari Association demanding SECVPF

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தன.

பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர் இந்த ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டிருந்தனர்.

இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் தங்களது கோரிக்கைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.