நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து அமரபுர பீடத்திற்கு விளக்கினார் ஜீ.எல்.பீரிஸ்

WhatsApp Image 2021 10 26 at 1.29.09 PM
WhatsApp Image 2021 10 26 at 1.29.09 PM

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அமரபுர பீடத்தின் மகாநாயக்க தொடம்பஹல ஸ்ரீ சத்ரிஸ்ரீ தேரரை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று செவ்வாய்க்கிழமை அமரபுர பீடத்தின் மகாநாயக்க தொடம்பஹல ஸ்ரீ சத்ரிஸ்ரீ தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன்போதே அமைச்சர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், மத, சமூக மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தேரருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர், நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் நிலைமை தொடர்பிலும், எதிர்வரும் தினங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.