நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் குருநகர் பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இழுவை மடி தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி அண்மையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இழுவை மடி தொழிலும் நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டதாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குருநகர் மீனவர் தெரிவித்தனர்.
குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தி சங்க முன்றலில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.