வெல்லவாய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எல்லவல நீர்வீழ்ச்சிக்கு மீள் அறிவிக்கும் வரை சுற்றுலாப்பயணிகளுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அத்துடன், இதுவரை காலப்பகுதியில் எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரணத்தைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய சுற்றாடல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.