தம்பலகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கந்தளாய், முள்ளிப்பொத்தானை, குளியாப்பிட்டி, குருநாகல், ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபர்களை கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.