நாட்டின் முதலாவது மணல் மேடு பாதை திறந்து வைப்பு

sand
sand

கொழும்பு டியூன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள, நாட்டின் முதலாவது மணல் மேடு பாதை இன்று (28) கொழும்பு துறைமுக நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது சுமார் 2 கிலோமீற்றர் நீளமுள்ள 3 பாதைகள் அமைந்துள்ளதுடன், கொழும்பு துறைமுக நகரில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் தலைமையில் இந்த மணல் மேடு பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.