ஆட்சிக் கவிழ்ப்பு எமது நோக்கம் அல்ல – பங்காளிக் கட்சிகள்

1
1

“ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அல்ல, அரசைப் பாதுகாக்கவே போராடுகின்றோம்” என்று அறிவித்தல் விடுத்துள்ளனர் அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது எனவும், பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தனிவழி பயணத்துக்குத் தயாராகி வருகின்றனர் எனவும் வெளியாகும் தகவல்களுக்குப்  பதிலளிக்கையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

“தேசிய வளங்களையும், நாட்டையும் பாதுகாக்கவே 69 இலட்சம் பேர் எமது அணிக்கு வாக்களித்தனர். எனவே, மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக நாம் அரசுக்குள் இருந்துகொண்டு போராடுவோம்.

ஆட்சி மாற்றமோ, ஆட்சிக் கவிழ்ப்போ எமது நோக்கம் அல்ல. இந்த அரசை முன்னோக்கி அழைத்துச் சென்று, நாட்டைப் பாதுகாக்க வேண்டும். பிரச்சினைகள் உள்ளன. அவற்றை பேச்சு மூலம் தீர்க்கவே முற்படுகின்றோம்” என்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.