வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடிப்பு!

c4dc6eee 7366 4d6b b3f8 815d722518d1
c4dc6eee 7366 4d6b b3f8 815d722518d1

வவுனியா கூமாங்குளம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இன்றையதினம் (28) வீட்டில் யாருமில்லாத நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை அவதானித்த அயலவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

குறித்த சம்பவத்தில் ஒருவருக்கு சொந்தமான இரு மோட்டார் சைக்கிள்களும் பகுதியளவில் எரிந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மோட்டார் சைக்கிள் உரிமையாளரால் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.