துன்கல்பிட்டிய கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

death 1
death 1

நீர்கொழும்பு – துன்கல்பிட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெப்பும்கொட படகு தரிப்பிடத்தை அண்மித்த கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர் எனக் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதிவானின் விசாரணைகளையடுத்து, பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துன்கல்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.