முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு காட்டுப்பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் ஒரு தொகை வெடிபொருட்கள் காவல்துறை அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (28) இரவு இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளையடுத்து, குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, இனங்காணப்படாத 21 குண்டுகள் மற்றும் 60 மில்லிமீற்றர் ரக மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.