மாகாண சபைத் தேர்தலுக்கு எதிரான அமைச்சர்கள் எங்கே? – சஜித் அணி கேள்வி

gg 2
gg 2

மாகாண சபைத் தேர்தலுக்கு எதிரான அமைச்சர்கள் எங்கே? என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மாகாண சபை முறைமை எமது நாட்டுக்கு பொருத்தமற்றது, அந்த முறைமையை ஒழிக்க வேண்டும், புதிய அரசமைப்பு ஊடாக இது நடக்கும் என அமைச்சர்களான விமல் வீரசன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோர் தெரிவித்து வந்தனர்.

ஆனால், இந்தியாவின் இராஜாதந்திரிகள் வந்துசென்ற நிலையில், அவசர அவசரமாக தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராகின்றது. ஆரம்பத்தில் எதிர்ப்பு வெளியிட்ட அமைச்சர்கள் மௌனம் காக்கின்றனர். இது தொடர்பில் அவர்களின் நிலைப்பாடு என்ன? என்றார்.