கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக அதிபர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று பகல் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.
![IMG 20211029 141201](https://thamilkural.net/wp-content/uploads/2021/10/IMG_20211029_141201-1024x576.jpg)
நாடளாவிய ரீதியில் அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
![IMG 20211029 141014](https://thamilkural.net/wp-content/uploads/2021/10/IMG_20211029_141014-1024x576.jpg)
குறித்த போராட்டத்தில் சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும் எனவும், சுபோதினி ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
![IMG 20211029 141032](https://thamilkural.net/wp-content/uploads/2021/10/IMG_20211029_141032-1024x576.jpg)
இதன் போது பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். தொடர்ந்து தமது பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்