சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி கிளிநொச்சியில் ஆசிரியர்கள் போராட்டம்!

IMG 20211029 141014 1
IMG 20211029 141014 1

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக அதிபர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று பகல் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.

IMG 20211029 141201

நாடளாவிய ரீதியில் அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

IMG 20211029 141014

குறித்த போராட்டத்தில் சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும் எனவும், சுபோதினி ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

IMG 20211029 141032

இதன் போது பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். தொடர்ந்து தமது பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்