கிளிநொச்சியில் விபத்து ; முதியவர் படுகாயம்

accident 5 700x375 1
accident 5 700x375 1

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தை அண்மித்து இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இன்று (30) காலை 11.15 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தை அண்மித்த ஏ9 வீதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியை சேர்ந்த 75 வயதான பொன்னம்பலம் என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாதசாரி கடவையை பயன்படுத்தாது குறித்த முதியவர் ஏ9 வீதியை கடக்க முற்பட்டபோது டிப்பர் வாகனம் குறித்த முதியவரை மோதியுள்ளதாகவும் சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.