பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் மாவனெல்லை-ஹெம்மாதம கும்பல்கம பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த 8பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கு காரணம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஹெம்மாதகம காவல் துறையினர் மேற்க்கொண்டு வருகின்றனர்.