யாழ் மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிப்பு!

samayam tamil 11
samayam tamil 11

யாழ் மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதுடன் குறித்த மழையுடன் கூடிய நிலையில் தாக்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறை, தெல்லிப்பளை, சங்கானை சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் அந்தந்த பிரதேச செயலர் ஊடாக பெறப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.