பதுளை, கேகாலை மாவட்டத்துக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

2 3
2 3

பதுளை மாவட்டத்தின் பசறை பகுதிக்கும், கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பகுதிக்கும் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.