போதைப் பொருளை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது!

kaithu
kaithu

ஹொரவ்பொத்தானை – மொரவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் ஹொரவ்பொத்தானை – மொரவெவ மற்றும் ராஜாங்கனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் காவல்துறை தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் குறித்த போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.