அண்மை நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியகுளம், கட்டைக்காடு பகுதியில் இவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழைகாரணமாக மக்களின் தற்காலிக குடியிருப்புக்களிற்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
இவ்வாறு குடியிருப்பு பகுதிகளிற்குள் வெள்ளம் செல்வதை தடுக்கும் நோக்கில் இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர்.