ஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Pinai
Pinai

தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி, சந்தேக நபர் குறித்த அதிகாரசபையின் தரவு தளத்தைப் பராமரித்துவந்த எபிக் லங்கா டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் தரவு இயக்குநராக கடமையாற்றி வந்துள்ளதுடன், அவர் செப்டெம்பர் 28 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.