போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்

traffic 1
traffic 1

கொழும்பு நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரியுமான நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்ரோன் கெமரா ஊடாக எதிர்வரும் வாரத்தில் விஷேட ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.