18 பிக்கு மாணவர்களுக்கு கொவிட்

thero2
thero2

ஆனமடுவ கொட்டுக்கச்சி வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில் 18 பிக்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவத் தேரர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சுமார் 65 மாணவத் தேரர்கள் தங்கியிருந்து கல்வி பயிலும் வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில், 10 சிறுவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான 18 மாணவ தேரர்களுக்கும் தனித்தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன தெரிவித்துள்ளார்.