முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு ஜக்கிய மக்கள் சக்தியினரால் ஒரு தொகுதி சப்பாத்துக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாங்குளம் பிரதேசத்தில் கல்விகற்று வரும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் நலன் கருதி புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் முத்துச்சாமிமுகுந்தகஜன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக, ஜக்கிய இளைஞர் சக்தியின் வன்னிமாவட்ட செயலாளர் முத்துக்குமாரசாமி லக்ஸ்சயன் அவர்களினால் ஆதர்சம் அமைப்பு ஊடாக 70 பாடசாலை மாணவர்களுக்கு சப்பாத்துக்கள் வழங்கும் நிகழ்வு 02.11.21 அன்று மாங்குளம் பிரதேச சபை பொது மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 35 பேருக்கும் மாங்குளம் சண்முகரட்ணம் வித்தியாலய பாடசாலை மாணவர்கள் 35 பேருக்கும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் றஞ்சித் மத்தும பண்டாரா நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான்விக்கிரம ரத்ன,புத்திக்கபத்திரன, ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திரப்பிரகாஸ், ஜக்கிய இளைஞர் சக்தியின் வன்னிமாவட்ட செயலாளர் முத்துக்குமாரசாமி லக்ஸ்சயன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முகுந்தகாஜன் ஆகியோர் கலந்நது கொண்டு சிறப்பித்துள்ளதுடன் மாணவர்களுக்கான சப்பாத்துக்களையும் வழங்கிவைத்துள்ளார்கள்.