காலியில் இளைஞர் அடித்து கொலை

death
death

கொத்துரொட்டி வாங்குவதற்காகச் சென்ற இளைஞர் ஒருவர், ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்படுத்திக்கொண்ட முறுகலையடுத்து அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம், காலியில் நேற்று இடம்பெற்றுள்ளது

26 வயது இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, இந்த மோதலில் படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து ஹோட்டல் உரிமையாளரின் மகனைக் கைதுசெய்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்