வவுனியா வடக்கு வலயத்தை சேர்ந்த பாடசாலை ஒன்றின் இரு ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 1 மற்றும் தரம் 5 மாணவர்களின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து அவர்களின் பெற்றோர் குறித்த இருவரையும் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று இன்று (03) அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதன்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த குறித்த இரு மாணவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.