கருத்தொருமித்து ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள்-மயூரக்குருக்கள்

IMG 5874
IMG 5874

தீபத்திருநாளில் அனைவரும் கருத்தொருமித்து ஆனந்தமயமான வாழ்வை வாழ வாழ்த்துவதாக கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயணர் தேவஸ்தானத்தின் பிரதமகுருவான மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிறக்கின்ற தீபத்திருநாளில் அனைவருக்கும் சங்கடங்கள் நீங்கி மகிழ்வாக  வாழ ஆத்ம பலத்தினை இறைவன் அருள வேண்டும். இருள்மைகள் நீங்கி ஒளிமயமான பாதையில் அனைவரும் ஒன்றாக பயணித்திடவும் அறியாமை போக்கி ஆனந்தமாக வாழ்ந்திடவும் தீப ஒளித்திருநாளில் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோர்களிற்கு வழிபாடியற்றியும் வரும் சந்ததிகள் நீண்ட வாழ்வுகளை வாழவும் வாழ்த்துவதுடன், வாழும் காலத்தில் அனைவருக்கும் உறுதுணையாக அன்பு பரிமாறும் நல் உள்ளத்தவர்களாக இயலாதவர்களை எம்மோடு இணைத்து அவர்களையும் உயர்த்தி நாமும் உயர்வாக வாழ சிந்தை செய்து கொள்வோம். 

அனைவரும் ஆனந்த மயமான வாழ்வினை வாழவும் கருத்து முரண்பாடுகள் எல்லாம் கருத்தொருமித்துக் கொள்ளவும் பழையன கழித்து புதியன கொண்டு நல்லெண்ண வெளிப்பாடுகளோடு இந்தப் பூமிப் பந்தில் வாழும் காலம் வரை உணர்வுள்ள மனிதர்களாக வாழ வேண்டும் என்று அனைவரையும் ஆத்மார்த்தமாக வேண்டிக் கொண்டு இனிய தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழுங்கள். எண்ணமும் சிந்தனையும் உயர்ந்ததாகக் கொள்வோம். அனைவருக்கும் காத்தல் கடவுளாகவும் நாராயணப்பெருமான் திருவருள் கிடைக்கட்டும்.