சுபீட்சமான ஆண்டாக அமைய வேண்டும் – வட மாகாண அவைத் தலைவர்

cvk
cvk

எங்களுடைய அனைத்து மக்களுக்கும் சுபீட்சமான, மகிழ்ச்சியான ஒரு ஆண்டாக 2020 ஆம் ஆண்டு அமையவேண்டும் என இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன் என வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நாளை மலரவுள்ள புத்தாண்டினை முன்னிட்டு சீ.வீ.கே.சிவஞானம் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

“கடந்த வருடம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு முன்னேற்றகரமான நிலையை எட்ட முடியாத ஒரு ஆண்டாக 2019 ஆம் ஆண்டு கழிந்து செல்கின்றது.

எவ்வாறாயினும் இரண்டு தேர்தல்களை சந்திக்க வேண்டிய ஆண்டாக 2020ஆம் ஆண்டு காணப்படுகின்றது.

அவ் இரண்டு தேர்தல்களிலும் தமிழ் தேசியத்தின் வலிமை வெளிப்படுத்திய வேண்டிய தேவை இருக்கின்றது. அவ்வாறான ஒரு வலிமையுடான பலத்துடன் தமிழ் மக்களின் இனப்பிரச்னை தொடர்பில் பேசக் கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும்.

அவ்வாறு பேசக்கூடிய சூழ்நிலையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங்கை அரசாங்கத்துடனும் உலகநாடுகளின் ஒத்துழைப்புடன் ஒரு முன்னேற்ற காரணமான நிலையை தமிழ் மக்கள் எட்டக் கூடிய ஆண்டாக 2020 ஆம் ஆண்டு மலர வேண்டும்.

எங்களுடைய அனைத்து மக்களுக்கும் சுபீட்சமான மகிழ்சியான ஒரு ஆண்டாக 2020 ஆம் ஆண்டு அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து வாழ்த்த விரும்புகின்றேன்.

அத்துடன் எங்களுடைய நிலவிடுவிப்பு, அரசியல் கைதிகள்விடுதலை, காணமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கும் சாதகமான விடிவு கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்தார்.