விஷேட அதிரடி படையினரால் இளைஞன் கைது

kaithu
kaithu

வவுனியா மதகுவைத்தகுளம் பகுதியில் கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை செட்டிகுளம் விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (03) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மதகுவைத்தகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் நிற்பதாக விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட விஷேட அதிரடி படையினர் இளைஞர் ஒருவரின் பயண பொதியினை சோதனையிட்டனர்.

இதன்போது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1கிலோ 506 மில்லிகிராம் எடையுடைய கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்