தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு

Train 2 1
Train 2 1

நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இதனைத் தெரிவித்தார்.

இரவுநேர அஞ்சல் தொடருந்து மற்றும் வழமையான நேர அட்டவணைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் இடம்பெறும் தொடருந்து சேவைகளுடன், குறுந்தூர தொடருந்து சேவைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்