பசறையில் 12 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்வு

flood 5
flood 5

பசறை – கனவரல்ல மவுஸாகல தோட்டத்தில், மண்சரிவு அச்சம் காரணமாக, 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் கனவரல்ல கொட்டுஹாதன்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நடவடிக்கைகளைப் பசறை பிரதேச செயலாளர் மேற்கொண்டுள்ளார்.

கடந்த இரு வாரங்களாக பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவுகின்ற மழையுடனான வானிலை காரணமாக, மலைப்பாங்கான பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால், மக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.