இன்றும் நாட்டின் பல பகுதிகளுக்கு மழை!

Rainning
Rainning

நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் காலை வேளையிலும் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கு அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.