யானை தந்தத்திலிருந்து கிடைக்கும் முத்துக்களை சிற்றூர்தி மூலம் கொண்டுச் சென்ற ஏழு பேரை கடற்படை புலனாய்வு பிரிவினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாடி வீட்டு வீதியில் இடம்பெற்றுள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சிற்றூர்தியையும் சந்தேக நபர்களிடமிருந்த 5 முத்துக்களை கடற்படையினர் இதன்போது பறிமுதல் செய்துள்ளனர்.