தற்போதைய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள வரிச்சலுகைககள், எதிர்வரும் மாதங்களில் மக்களுக்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி வீதம் குறைக்கப்பட்டதுடன், தேசத்தை கட்டியெழுப்பும் வரி நீக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மேலும் சில வரிச்சலுகைகளும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் பலன் முழுவதும் விரைவில் மக்களை சென்றடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.