புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி உள்ளிட்ட நால்வருக்கும் விளக்கமறியல்

vilakam
vilakam

கண்டி – தெல்தெனிய பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி உள்ளிட்ட நால்வரையும் இம்மாதம் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நால்வரும் இன்று(07) தெல்தெனிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

58 வயதான காவல்துறை அதிகாரியும் அவரது சகோதரர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.