புதையல் தோண்டிய மூவர் கைது!

kaithu
kaithu

புத்தளம் மாவட்டம், சிலாபம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட திகன்வௌ, பங்கதெனிய பிரதேசத்தில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூவரைப் காவற்துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர்.

வென்னப்புவ, சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15, 30, 35 வயதுகளையுடைய மூவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் காவற்துறையினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்திய பொருட்களையும் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் சிலாபம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.