கிளிநொச்சி ஊற்றுபுலம் வள்ளுவர் பண்ணைக்கான போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊற்று புலம் பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலயைில் தற்பொழுது ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக புது முறிப்பு குளத்தின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்தது. இந்த நிலயைில் ஊற்றுப் புலம் கிராமத்தில் தனி தீவாக 90 குடும்பங்கள் சிக்கும் அபாய நிலை தொடர்பில் அவசர நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் செய்தி வெளியானதை அடுத்து நேற்றைய தினம் குறித்த இடத்தை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்
இந்த நிலையில் இரவிரவாக குறித்த பாலத்தின் ஊடாக போக்குவரத்தை மேற்கொள்வதற்கான தற்காலிக பணிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலயைில் மக்கள் தமது அவசர தேவைகளிற்காக குறித்த வீதியை பயன்படுத்த முடியும் எனவும் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.