முல்லைத்தீவில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்

received 958473681431641
received 958473681431641

முல்லைத்தீவிலும் சுகாதார ஊழியர்கள் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார பணியாளர்களின் ஒன்றியம் தெரிவித்திருந்தது .

மருத்துவ ஆய்வக இராசாயனவியலாளர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், கண் பரிசோதகர்கள், குடும்ப நலத் தாதியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படாமை, தொழில்சார் பட்டப்படிப்பு பதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்காமை, சுகாதார நிர்வாக சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகாமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் வைத்தியசாலைகளிலும் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது