சீரற்ற காலநிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

red alert 750x375 1
red alert 750x375 1

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கொழும்பு, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

மாத்தளை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.