வவுனியாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை தனிமைப்படுத்துவதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காண சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை நேற்றையதினம் 42 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது