வி பி பவுண்டேசன் தொண்டர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் சிரமதானம்!

siramathaanam 11
siramathaanam 11

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் தீமைகளை  கட்டுப்படுத்தும் நோக்குடன் வி பி பவுண்டேசன் தனது தன்னார்வ சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.

 இதன் ஒரு அங்கமாக வி பி பவுண்டேசன் தொண்டர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் பொலித்தீன் பிளாஸ்ரிக் பொருட்களை அகற்றும் நோக்குடன்  சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வி பி பவுண்டேசன் ஸ்தாபகரும் இயக்குனருமான தெய்வேந்திரம்  இந்திரதாஸ் மற்றும் வி பி பவுண்டேசன் தொண்டர்கள் இணைந்து குறித்த சிரமதானப்பணியினை முன்னெடுத்திருந்தனர்.