அனுராதபுரம் பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக மல்வத்து ஓயாவின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மன்னார் தேக்கம் மற்றும் குஞ்சுக்குளம் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் நானாட்டான், மடு மற்றும் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (10) பிற்பகல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. ஸ்ரான்லி டி மெல் தலைமையில் உயர் மட்டக் குழுவினர் மன்னார் தேக்கம் மற்றும் குஞ்சுக்குளம் நீர்வரத்து பிரதான ஆற்றுப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டதுடன் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்தினர்.