சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ரவிராஜின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

IMG 20211110 WA0015 1
IMG 20211110 WA0015 1

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. சாவகச்சேரியில் நடராஜா ரவிராஜின் உருவச்சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரவிராஜின் குடும்பத்தினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.